கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

குடியரசு தின வன்முறை: வெளிநாடு தப்பி செல்ல முயன்றவர் உள்பட 2 வாலிபர்கள் கைது

டெல்லி குடியரசு தின வன்முறை சம்பவம் தொடர்பாக, வெளிநாடு தப்பி செல்ல முயன்றவர் உள்பட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினமான கடந்த ஜனவரி 26-ந்தேதி தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் வன்முறை மூண்டது. இதில் ஏராளமான போலீஸ்காரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் தினந்தோறும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர். அந்தவகையில் மணிந்தர்ஜித் சிங் (வயது 23), கெம்ப்ரீத் சிங் (21) ஆகிய 2 வாலிபர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் இருவரும் டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறையில் தொடர்புடையவர்கள் ஆவர்.

அதிலும் குறிப்பாக செங்கோட்டைக்குள் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரை, கெம்பிரீத் சிங் ஈட்டியால் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இவர் வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகரை சேர்ந்தவர் ஆவார்.

இதைப்போல பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூரை சேர்ந்த மணிந்தர்ஜித் சிங் தற்போது இங்கிலாந்தின் பர்மிங்காமில் வசித்து வருகிறார். இவர் ஆலந்து குடியுரிமையும் பெற்றுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு தப்பி செல்ல முயன்றபோது டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டார். செங்கோட்டை வன்முறை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து