தேசிய செய்திகள்

செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி,

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில் எர்ரவாரி பாளையம் பகுதி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கடத்தல்காரர்கள் சிக்கினர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்களில் முக்கிய குற்றவாளியான சங்கர் என்பவர் மீது கடப்பா மாவட்டத்தில் ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கவுள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.71 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 6 இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை