தேசிய செய்திகள்

செம்மரம் கடத்திய வழக்கு - சசிகலா உறவினர் பாஸ்கரன் உள்பட 17 பேர் கைது

செம்மரம் கடத்தல் தொடர்பாக சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தினத்தந்தி

ஐதராபாத்,

சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக். இவரது மாமனார் பாஸ்கரன்(55) சென்னை அண்ணா நகர் மேற்கில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவதாக ஆந்திர மாநில போலீஸார் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவரை சென்னை அண்ணாநகரில் வைத்து ஆந்திர போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர் தமிழகத்தில் இருந்து கூலிக்கு ஆட்களை அழைத்துச் சென்று செம்மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கடப்பா நாகவேந்திரா ரெட்டி, சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் என மொத்தம் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 55 செம்மரங்கள், 2 கார்கள், 300 கிராம் தங்கம், 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்