மாநில கட்சிகள்தான் மக்களின் பிரச்சினைகளை நன்றாக புரிந்துகொண்டவை. அதனால், மாநில கட்சிகள் ஒன்று சேருவது அவசியம். இதுதொடர்பாக பல்வேறு மாநில கட்சிகளுடன் பேசி வருகிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும். இந்த அணி, வலிமையான அணியாக உருவெடுக்கும் என்று நம்புகிறேன். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இப்போது நாடுதழுவிய கட்சியாக இல்லை. அதனால், இந்த அணிதான் பா.ஜனதாவுக்கு எதிரான 2-வது அணியாக இருக்கும். பா.ஜனதாவுடனான எங்களது பல வருட கூட்டணி நிரந்தரமாக முடிந்து விட்டது. என்ன நடந்தாலும், பஞ்சாபில் வேளாண் சட்டங்களை அமல்படுத்த விட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.