தேசிய செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-உத்தர கன்னடா மாவட்டத்தில் மழை பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. அதை நேரில் பார்வையிட நான் அந்த மாவட்டத்திற்கு இன்று செல்கிறேன். நிவாரண முகாம்களில் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறேன்.

உள்துறை மந்திரி  ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு டெல்லி செல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து