தேசிய செய்திகள்

யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் 18-ந் தேதி தளர்த்தப்படும்: புனரமைக்கும் திட்டமும் அறிவிப்பு

யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் 18-ந் தேதி தளர்த்தப்படும் என்றும், புனரமைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நிதிநெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை கடந்த 5-ந் தேதி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதன் நிறுவனர் பல்வேறு முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு யெஸ் வங்கி புனரமைப்பு திட்டத்தை 13-ந் தேதி அறிவித்துள்ளது.

அதன்படி, அந்த வங்கியில் உள்ள தனது பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி 3 ஆண்டுகளுக்கு 26 சதவீதத்துக்கு கீழ் குறைக்கக் கூடாது. மற்ற முதலீட்டாளர்கள், தற்போதுள்ள பங்குதாரர்களின் 75 சதவீத பங்குகள் 3 ஆண்டுகளுக்கு முடக்கிவைக்கப்படும். 100 பங்குகளுக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் குமார் தலைமையிலான புதிய நிர்வாகம் இந்த மாத இறுதியில் பொறுப்பேற்கும். வருகிற 18-ந் தேதி யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது