தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி வருமானவரி ‘ரீபண்ட்’

நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி வருமானவரி ரீபண்ட் ஆகி இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதிவரை, வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 952 கோடியை திரும்ப வழங்கி (ரீபண்ட்) இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

இதில், தனிநபர் வரி செலுத்தும் 76 லட்சத்து 21 ஆயிரத்து 956 பேருக்கு ரூ.27 ஆயிரத்து 965 கோடியும், கார்ப்பரேட் வரி செலுத்தும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 424 பேருக்கு ரூ.74 ஆயிரத்து 987 கோடியும் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.