தேசிய செய்திகள்

சபரிமலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.102 கோடி கேரள பட்ஜெட்டில் ஒதுக்கீடு

சபரிமலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.102 கோடி கேரள பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை - வெள்ளம் மற்றும் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதால் எழுந்த போராட்டங்கள் போன்ற காரணங்களால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சமீபத்திய மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனில் பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்திருந்தது. இதனால் ரூ.100 கோடிக்கும் மேல் வருமானம் சரிவடைந்தது.

இதைத்தொடர்ந்து சபரிமலையை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் மாநில அரசிடம் இருந்து நிதியுதவி கோரியது. இதை ஏற்று மாநில அரசும் தேவசம்போர்டுக்கு ரூ.100 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. இதைத்தவிர சபரிமலையில் பல்வேறு மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள ரூ.102.16 கோடி, அருகில் உள்ள பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடி என ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்