தேசிய செய்திகள்

அரசு வேலைவாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி

திருபுவனை அருகே அரசு வேலைவாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்,.

தினத்தந்தி

திருபுவனை

திருபுவனை கலித்தீர்த்தாள்குப்பம் ரமேஷ் என்பவர் மதகடிப்பட்டு பாளையம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரிடம் கடந்த 2018-ஆம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் வாங்கியுள்ளார். வேலை வாங்கி தராததால் ரமேஷிடம் அவர், பலமுறை பணத்தை திரும்ப கேட்டும் கொடுக்கவில்லை. இன்று மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த ரமேசிடம், வடிவேல் மீண்டும் பணத்தை கேட்டபோது, அவரை சராமரியாக தாக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

திருபுவனை போலீசில் வடிவேல் கொடுத்த புகாரின், ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்