தேசிய செய்திகள்

டெல்லியில் 2 நிறுவனங்களில் ரூ.3,500 கோடி வரிஏய்ப்பு - வருமான வரித்துறை கண்டுபிடித்தது

டெல்லியில் 2 நிறுவனங்களில் ரூ.3,500 கோடி வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி


புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் நிறுவனம் மற்றும் தொலைபேசி நிறுவனம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் எண்ணெய் நிறுவனத்தில் ரூ.3,200 கோடிக்கும், தொலைபேசி நிறுவனத்தில் ரூ.324 கோடிக்கும் வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை முடிவில் இந்த தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல டெல்லியில் உள்ள பல ஆஸ்பத்திரிகளில் அதிகளவு வரி பிடித்தம் செய்து, குறைந்த அளவே வருமான வரித்துறைக்கு கட்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. 2 ஆஸ்பத்திரிகளில் நடந்த சோதனையில் ஒன்றில் ரூ.70 கோடிக்கும், மற்றொன்றில் ரூ.20 கோடிக்கும் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு