தேசிய செய்திகள்

அன்னிய செலாவணி சட்டத்தை மீறிய சர்வதேச அமைப்புக்கு ரூ.51 கோடி அபராத நோட்டீஸ் அமலாக்கத்துறை நடவடிக்கை

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறி, பதிவு செய்யப்படாத தனது இந்திய அமைப்புகளுக்கு பெருமளவு நன்கொடையை அனுப்பி வந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி, 

சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் இந்திய பிரிவான ஆம்னஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் அமைப்புக்கு ரூ.51 கோடியே 72 லட்சம் அபராதம் விதிப்பதற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் விடுத்துள்ளது. அந்த அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆகர் படேலுக்கு ரூ.10 கோடி அபராதத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறி, பதிவு செய்யப்படாத தனது இந்திய அமைப்புகளுக்கு பெருமளவு நன்கொடையை அனுப்பி வந்துள்ளது.

இது, அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறைகளை மீறிய செயல் என்பதால், அபராதம் விதிப்பதற்கு விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து