தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் தங்கம் பறிமுதல்: பயணி கைது

1 கிலோ 760 கிராம் எடையில் இருந்த 2 தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

புதுடெல்லி,

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து டெல்லிக்கு வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது ஒரு பயணி தனது உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1 கிலோ 760 கிராம் எடையில் இருந்த 2 தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.90.27 லட்சம் ஆகும். இது தொடர்பாக சுங்க அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்