தேசிய செய்திகள்

குரூப் பி, குரூப் சி பணியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ்; கெஜ்ரிவால் அறிவிப்பு

குரூப் பி, குரூப் சி பணியாளர்கள் 80 ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, டெல்லி அரசில் பணியாற்ற கூடிய, அரசிதழ் பதிவுபெறாத குரூப் பி பணியாளர்கள் மற்றும் குரூப் சி பணியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

இதன்படி குரூப் பி, குரூப் சி பணியாளர்கள் 80 ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

என்னுடைய அரசு, பணியாளர்களின் வாழ்க்கை சிறப்படைவதற்கான முயற்சியை எப்போதும் மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் வருங்காலத்திலும் தொடரும் என்று கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து