தேசிய செய்திகள்

வறுமையை மனநிலை என்றவர்தானே..! ராகுலை விளாசிய நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தார். மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலுரை ஆற்றிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது :

இதே அவையில் கடந்த 2013- ஆம் ஆண்டு பேசிய உங்கள் தலைவர், வறுமை என்பது உணவு, பணம், பொருட்களின் பற்றாக்குறை அல்ல. அது ஒரு மனநிலை. ஒருவருக்கு தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் அவர் ஏழ்மையை வெல்லலாம் என்று பேசியவர்தான். அவரது பெயரை நான் இங்கு குறிப்பிடவில்லை. இந்த வறுமையைப் பற்றிதான் உங்களின் எம்.பி. இப்போது பேசினாரா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன் என ராகுல் காந்தியை மறைமுகமாக சாடினார்.

நிர்மலா சீதாராமன் இவ்வாறு பேசும் போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனினும், அதை பொருட்படுத்தாத நிர்மலா சீதாராமன் தனது உரையை முடித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது