தேசிய செய்திகள்

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு: உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்தது தொடர்பாக, உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சியூர் அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவின்போது சப்பாத்தியும் அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவியது. இதுதொடர்பாக மாநில அரசு 2 ஆசிரியைகளை பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், தலைமை செயலாளர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்