தேசிய செய்திகள்

நகரம் சுகாதாரமாக இருக்க தூய்மை பணியாளர்களே காரணம்; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பேச்சு

நகரம் சுகாதாரமாக இருக்க தூய்மை பணியாளர்களே காரணம் என முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.

தினத்தந்தி

சிவமொக்கா;

சிவமொக்கா டவுனில் உள்ள குவெம்பு கலையரங்கில் நேற்று தூய்மை பணியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்டத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது;-

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமித்து ஆணை வெளியிட்டுள்ளார். ஒரு நகரம் சுகாதாரமாக இருக்க நீங்களே முதல் காரணம்.

உங்கள் வாழ்வு வளம் பெற பா.ஜனதா அரசு உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரும். இவ்வாறு அவர் பேசினார். இதில் நிகழ்ச்சியில் ராகவேந்திரா எம்.பி., மாநகராட்சி மேயர் சுனிதா அண்ணப்பா, துணை மேயர் சங்கர் கன்னி மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்