தேசிய செய்திகள்

பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம் - மத்திய அரசு

பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதரர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பனாமா நாட்டிற்கான இந்திய தூதராக உபேந்தர் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், இஸ்ரேலுக்கான இந்திய தூதராக சஞ்சீவ் குமார் சிங்கவா நியமிக்கப்பட்டுள்ளார்.