தேசிய செய்திகள்

பொது பிரிவினரின் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் வயது வரம்பை தளர்த்தக்கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை

பொது பிரிவினரின் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் வயது வரம்பை தளர்த்தக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு அரசு பணிகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும், குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பை முழுவதுமாக தளர்த்தக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரர் ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெயசுகின் தாக்கல் செய்திருந்த இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு