புதுச்சேரி,
காரைக்கால் கந்தூரி விழா என்பது தமிழ்நாட்டின் காரைக்கால் பகுதியில் உள்ள நாகூர் தர்காவில் நடைபெறும் முக்கியமான இஸ்லாமிய மத விழாக்களில் ஒன்றாகும். இது வருடந்தோறும் இஸ்லாமிய காலண்டர் அடிப்படையில் இந்த கந்தூரி விழா நடத்தப்படுகிறது. பொதுவாக, 30 நாள்கள் வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. முக்கிய நிகழ்வாக சந்தனம் பறிப்பு, கொடி ஏற்றம், மௌலீது பாடல்கள், சந்தனம் அணிவித்தல், தர்கா சந்தனக் கட்டை ஊர்வலம், நலத்திட்ட உதவிகள் போன்றவை இடம்பெறும்.
இந்த விழா நடைபெறும்போது ஆண்டு தோறும் அந்த நாளில் விடுமுறை அறிவிக்கப்படும். அதே போல் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ”காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழாவை முன்னிட்டு வருகின்ற 29.1.2026 (வியாழக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்/கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விடுமுறைக்கு ஈடு செய்யும் வகையில் வருகின்ற 7.02.2025 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்” என்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் நாளை செய்முறைத் தேர்வுகள், முன்பருவத் தேர்வுகள் இருப்பின் திட்டமிட்டபடி அவை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.