அமராவதி,
ஆந்திர பிரதேசத்தில் வருகிற அக்டோபர் 5ந்தேதி முதல் பள்ளி கூடங்களை மீண்டும் திறப்பது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளிக்கூடங்களை திறப்பது வருகிற நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி காணொலி காட்சி வழியே இன்று பேசும்பொழுது, பள்ளிகளை வருகிற அக்டோபர் 5ந்தேதி முதல் மீண்டும் திறப்பது என முன்பு முடிவு செய்யப்பட்டு இருந்தது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சீருடை உள்ளிட்ட பொருட்களையும் அக்டோபர் 5ந்தேதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. எனினும், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளிக்கூடங்களை திறப்பது வருகிற நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு வழங்க வேண்டிய 3 ஜோடி சீருடைகள், பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஒரு ஜோடி காலணிகள், 2 ஜோடி காலுறைகள், ஒரு பெல்ட் மற்றும் பள்ளிக்கூட பை ஒன்று ஆகியவை அக்டோபர் 5ந்தேதி அவர்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.