தேசிய செய்திகள்

டெல்லியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது

டெல்லியில் கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியின் பதேப்பூர் பெரியில் உள்ள கோவிலில் நப்பே பகத் (வயது 42) என்கிற சாமியார் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிவந்தார். அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்ட மகனை சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது தன்னுடைய உறவினரின் 15 வயது சிறுமியையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது கோவிலில் சாமியார் நப்பே பகத், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி உறவுக்கார பெண்ணிடம் தெரிவித்துள்ளார். போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் சாமியார் நப்பே பகத் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது. போலீசார் நப்பே பகத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்