தேசிய செய்திகள்

காங்கிரசின் மூத்த தலைவர் ஜி.எஸ். பாலி உடல்நல குறைவால் காலமானார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஜி.எஸ். பாலி உடல்நல குறைவால் டெல்லியில் காலமானார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஜி.எஸ். பாலி (வயது 67). நீண்டகாலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை டுவிட்டர் வழியே, அவரது மகன் ரகுபீர் சிங் பாலி உறுதி செய்துள்ளார். அந்த பதிவில், எனது அன்பிற்குரிய தந்தை மற்றும் உங்கள் அனைவருக்கும் அன்பானவரான ஜி.எஸ். பாலி நம்முடன் இல்லை என கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அவர் இந்த உலகில் இல்லையெனினும், அவர் கூறிய விசயங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்ந்து என்றும் நம்முடன் இருக்கும் என தெரிவித்து உள்ளார். அவர், இமாசல பிரதேசத்தின் காங்ரா நகரில் கடந்த 1954ம் ஆண்டு பிறந்தவர் ஆவார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு