தேசிய செய்திகள்

மும்பை தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி இழப்பு

மும்பை தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை தேசிய பங்குச்சந்தைகளில் இன்று திடீர் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 1250 புள்ளிகள் சரிந்து 33,482 புள்ளிகளாக வர்த்தகம் இருந்தது. கிட்டதட்ட 4.6 சதவீதம் அளவுக்கு சென்செக்ஸ் சரிவு இருந்தது. நிப்டி 316 புள்ளிகள் சரிந்து 10,300 புள்ளிகளாக வர்த்தகம் இருந்தது. சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட திடீர் சரிவு மும்பை பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

மும்பை பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட இந்த திடீர் சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ. 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் ரூ.5.40 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் கவலை அடைந்தனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 64.06 என்று வர்த்தகம் ஆன நிலையில், இன்று 64.38 ஆக வீழ்ச்சி அடைந்தது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை