தேசிய செய்திகள்

அயோத்தியில் தொடர் குண்டுவெடிப்பு: பதற்றம் நீடிப்பு

அயோத்தியில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

தினத்தந்தி

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள காசிராம் காலனியில் நேற்று மாலை திடீரென அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீராம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு வெடிகுண்டுகள் நிரப்பிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அதனை செயலிழக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததாலும், வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் அயோத்தியில் பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையே காதல் விவகாரமே குண்டு வெடிப்புக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு