தேசிய செய்திகள்

டெல்லியில் கடுமையான பனிமூட்டம்: 450 விமானங்களின் சேவை பாதிப்பு

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 450 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. காலை 5.30 மணிக்கு தொடங்கி 10.20 மணிவரை பனிமூட்டம் நீடித்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமானத்தை இயக்க போதுமான வெளிச்சம் இல்லை. ஓடுதளமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு காணப்பட்டது.

இதனால், விமானங்கள் புறப்படுவதும், தரை இறங்குவதும் நிறுத்தப்பட்டது. சில விமானங்கள், வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்தவகையில், சுமார் 450 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. காலை 10.20 மணிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது