தேசிய செய்திகள்

ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை தலைவர் பொறுப்பில் இருந்து சரத்யாதவ் நீக்கம்

ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை தலைவர் பொறுப்பில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்த நிதிஷ் குமார் அண்மையில், அந்த கூட்டணியை முறித்துக்கொண்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், நிதிஷ் குமாருக்கும் சரத் யாதவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை தலைவர் பொறுப்பில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார். சரத்யாதவுக்கு பதிலாக ஆர்.சி.பி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.சி.பி சிங் ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான கடிதத்தை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பிக்கள் மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச்சேர்ந்த 10 பேர் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்