ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம், ஷோபியன் என்ற இடத்தில், 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினர் போலியாக என்கவுண்ட்டர் நடத்தி இந்த படுகொலையை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ராஷ்டீரிய ரைபிள் ராணுவ படைப்பிரிவை சேர்ந்த அதிகாரி பூபிந்தர் மற்றும் காவலர்கள் பிலால் அஹ்மத் மற்றும் தபீஷ் அகமது ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு விசாரணைகள் 18-ந் தேதி நிறைவு பெற்றது.
அப்போது ஆயுதப்படையினர் அதிகாரங்களை மீறி செயல்பட்டனர் என்று தெளிவானது. இந்தநிலையில் ராணுவ அதிகாரி மற்றும் காவலர்கள் இருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ