தேசிய செய்திகள்

இந்திய பொருளாதாரத்தை குப்புற தள்ளிவிட்டார்: மோடி மீது, ராகுல் காந்தி கடும் தாக்கு

இந்திய பொருளாதாரத்தை குப்புற தள்ளிவிட்டார் என மோடி மீது, ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடியும், பொருளாதார ஆலோசகர்கள் அடங்கிய அவரது கனவு அணியும் பொருளாதாரத்தை குப்புற தள்ளி விட்டனர். முன்பு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம், பணவீக்கம் 3.5 சதவீதம் என்று இருந்தது. இப்போது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 சதவீதம், பணவீக்கம் 7.5 சதவீதம் என்று ஆகி உள்ளது.

பிரதமர் மோடியும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் பொருளாதார விவகாரத்தில், அடுத்து என்ன செய்வது என்று எந்த யோசனையும் இல்லாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...