தேசிய செய்திகள்

கர்நாடக முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவிப்பு

சித்தராமையா முதல்மந்திரியாக பொறுப்​பேற்று 3 ஆண்​டு​கள் ஆன நிலை​யில், டி.கே.சிவகு​மாருக்கு அந்த பதவியை வழங்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கினர்.

கர்​நாட​கா​வில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் கட்சி வென்​றதை தொடர்ந்து முதல்​ மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்​பட்​டது. மூத்த தலை​வர்​களான‌ சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்​கும் இடையே போட்டி நில​வியது. நீண்ட இழுபறிக்கு பின்​னர் சித்​த​ராமை​யா​வுக்கு முதல் மந்திரி பதவியும், டி.கே.சிவகு​மாருக்கு துணை முதல் மந்திரி பதவி​யும் வழங்கப்​பட்​டது. அப்​போது இரு​வருக்​கும் தலா இரண்​டரை ஆண்டு​கள் முதல் மந்திரி பதவி வழங்க காங்​கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்​மதம் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

சித்தராமையா ஒப்புதல்

இந்த நிலையில், சித்தராமையா முதல்மந்திரியாக பொறுப்​பேற்று 3 ஆண்​டு​கள் ஆன நிலை​யில், டி.கே.சிவகு​மாருக்கு அந்த பதவியை வழங்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கினர். இதையடுத்து டெல்​லி​யில் நேற்று முன்​தினம் மாலை காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில் முதல்வர் மாற்ற விவ​காரம் தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பதவியில் இருந்து விலக சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

ராஜினாமா அறிவிப்பு

இதையடுத்து, முதல்-மந்திரி சித்தராமையா இன்று காலை 9 மணிக்கு அனைத்து மந்திரிகளுக்கும் சிற்றுண்டி கூட்டத்தை தனது வீட்டில் ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விருந்துக்கு பிறகு தனது ராஜினாமா முடிவை சித்தராமையா அறிவித்தார். கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக டிகே சிவக்குமார் நாளை பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.