தேசிய செய்திகள்

சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா: டெல்லி சுகாதாரத்துறை பொறுப்பு துணை முதல்-மந்திரியிடம் ஒப்படைப்பு

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அம்மாநில சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்-மந்திரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் அவர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷலிட்டி ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் நோய்த்தொற்று இல்லை என தெரியவந்தது. இதையடுத்து 24 மணி நேரத்துக்கு பிறகு 2-வது முறையாக சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவர் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்பட பிற துறைகளும் மணீஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரி சத்யேந்திர சிங், கடந்த 14-ந் தேதி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றிய உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு