தேசிய செய்திகள்

சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். #Dantewada

ராய்பூர்,

தண்டேவாடாவின் சோல்நார் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தில் மாநில சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. காயம் அடைந்த இரு வீரர்கள் ஆபத்தான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் ராய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதற்கிடையே பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பறித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையும் நடக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்