தேசிய செய்திகள்

அமர்நாத்தை மிரட்டும் பனி...சிக்கிய 6 ஆயிரம் பக்தர்கள்

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சாலைகளால், அமர்நாத் புனித யாத்திரை இரண்டாவது நாளாக தடைபட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், ராம்பன் மாவட்டத்தில் தொடரும் பனிப்பொழிவு மற்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சாலைகளால், அமர்நாத் புனித யாத்திரை இரண்டாவது நாளாக தடைபட்டுள்ளது.

இதனால், யாத்திரைக்குச் சென்ற சுமார் 6 ஆயிரம் பக்தர்கள், நிவாஸ் சந்திரகோட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சாலைகளை சீரமைக்க இன்றைய தினம் வாய்ப்பில்லை எனவும், அமர்நாத் குகை கோயிலில் தரிசனம் மேற்கொள்ள இன்னும் இரண்டு தினங்கள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT