தேசிய செய்திகள்

போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு பெண் கைது

போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெங்களூரு: பெங்களூரு கம்மனஹள்ளி மெயின் ரோட்டில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வெளிநாட்டு பண்ணை பானசாவடி போலீசார் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் கையில் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் பார்த்தனர். அப்போது அந்த பையில் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர் தான்சானியா நாட்டை சேர்ந்த பாத்திமா ஒமரி (வயது 30) என்பது தெரியவந்தது. சுற்றுலா விசாவில் பெங்களூருவுக்கு வந்த பாத்திமா விசா காலம் முடிந்தும் சொந்த ஊருக்கு செல்லாமல் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து போதைப்பொருட்கள் விற்றதும் தெரியவந்தது. கைதான பாத்திமாவிடம் இருந்து 13 கிராம் எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு