தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.

தினத்தந்தி

ஜம்மு,

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கின்ற போதிலும், பாகிஸ்தான் அவ்வப்போது எல்லையில் அத்துமீறலை தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. மோட்டார்கள் ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை பாகிஸ்தான் 110 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை