தேசிய செய்திகள்

டெல்லி ஆஸ்பத்திரியில் சோனியாகாந்திக்கு தொடர்ந்து சிகிச்சை

டெல்லி ஆஸ்பத்திரியில் சோனியாகாந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி (வயது 75) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டு தனிமையில் இருந்த அவர், நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2-வது நாளாக நேற்று அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சோனியாகாந்தியை அவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர். அவரது உடல் நலம் முன்னேறி வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT