தேசிய செய்திகள்

ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து; கணவன் - மனைவி பலி

அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்தனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 40). இவரது மனைவி சமீன் பானு. கணவன் - மனைவி இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் ரிச்மவுண்ட் பகுதியில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் தம்பதியின் ஸ்கூட்டர் உள்பட 4க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த இஸ்மாயில் அவரது மனைவி சமீன் பானு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்தனர்.  

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்