தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம்

மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் விலகிச்சென்றது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஜெய்பூரில் இருந்து நேற்று இரவு 11.45 மணியளவில் மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்றது.

கனமழையால் ஏற்பட்ட ஓடுபாதையில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச்சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பை வரவேண்டிய விமானங்கள் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து