தேசிய செய்திகள்

லகிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி

ராகுல் காந்தி, பிரியங்கா உள்பட 5 பேர் மட்டும் லகிம்பூர் செல்ல உத்தர பிரதேச உள்துறை அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் லகிம்பூரில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறையில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க செல்லும் அரசியல் தலைவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. அந்த வகையில், லகிம்பூர் சென்ற பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கு செல்ல இருப்பதாகவும், விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது எனவும் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

தொடர்ந்து லகிம்பூருக்கு ராகுல் காந்தி புறப்பட்டுள்ளார். இந்த நிலையில், லகிம்பூரில் விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேருக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்