தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் முறையீடு

வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இந்த மாதம் 4-வது வாரத்தில் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 22, 23-ந்தேதிகளில் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி தெரிவித்திருந்தது. 

இதனிடையே அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ரத்து குறித்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க தொடங்கியதால், வேதாந்தா மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் இன்று மீண்டும் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இந்த மாதம் 4-வது வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்