கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்திய மருத்துவக் கல்லூரிகள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை வித்தியாசமாக நடத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு இன்டர்ன்ஷிப்பின் போது உதவித்தொகை வழங்கப்படுவதில்லை எனக் கூறி டாக்டர்கள் குழு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், "இந்திய மருத்துவக் கல்லூரிகள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை வித்தியாசமாக நடத்த முடியாது. வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு அவர்களின் இன்டர்ன்ஷிப்பின் போது உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். உதவித்தொகை வழங்குவது குறித்த முந்தைய உத்தரவை நிறைவேற்றாவிட்டால், கல்லூரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என உத்தரவிட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து