தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் மரண வழக்கு; சினிமா பிரபலங்களின் மேலாளர் உள்பட 3 பேர் கைது

போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு சுஷாந்த் சிங் மரணத்தில், போதை பொருள் தொடர்பான வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தினத்தந்தி

மும்பை,

சினிமா பிரபலங்களுக்கான மேலாளர் ரகிலா, இங்கிலாந்தை சேர்ந்த கரன் சஞ்னானி ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து இருந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு சுஷாந்த் சிங் மரணத்தில், போதை பொருள் தொடர்பான வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போதை பொருள் கும்பலை சேர்ந்த கரம்ஜீத் சிங் ஆனந்தின் சகோதரர் ஜக்தாப் சிங் ஆனந்தையும் கைது செய்து உள்ளனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு