புதுடெல்லி,
செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சாமி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியானது விரைவில் தொடங்கும், பக்தர்கள் அடுத்த ஆண்டு தீபாவளியை அங்கு கொண்டாடலாம். அடுத்த தீபாவளி அயோத்தியில் புதியதாக கட்டப்படும் ராமர் கோவிலில் கொண்டாடப்படும். எல்லாம் தயாராகிவிட்டது. சுவாமி நாராயண் கோவிலை போன்று உள்கட்டமைப்பை மட்டும் பொருத்தினால் கோவில் தயாராகிவிடும். நரசிம்ம ராவ் அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அபிடவிட்டில் அங்கு கோவில் இருப்பது உறுதி செய்யப்பட்டால், நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே கோவிலை கட்டுவதற்கு புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது.
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி பெறுவோம் என கூறிஉள்ளார்.