தேசிய செய்திகள்

கொரோனா தினசரி பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடம்

கொரோனா தினசரி பாதிப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களை கடுமையாக பாதித்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளானார்கள்.

இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 33 ஆயிரத்து 59 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே தினசரி தொற்று பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை கேரளா வகிக்கிறது. அங்கு 31 ஆயிரத்து 337 பேர் புதிதாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலையுடன் முடிந்த ஒரு நாளில் தமிழ்நாட்டில் புதிதாக 34 ஆயிரத்து 875 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், 365 பேர் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கேரளாவில் 32 ஆயிரத்து 762 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். கர்நாடகாவில் 34,281- பேரும், மராட்டியத்தில் 34,031- பேரும் நேற்று தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்