ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்றது. ஆனால், கடந்த 22-ந் தேதி, அம்மாநில சட்ட மேலவைக்கு 3 இடங்களுக்கு நடந்த தேர்தலில் அக்கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
இதன் முடிவுகள் நேற்று அதிகாலை அறிவிக்கப்பட்டன. 3 இடங்களிலும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.