தேசிய செய்திகள்

தொலைத்தொடர்பு அலைக்கற்றைகள் ரூ.77,814.80 கோடிக்கு ஏலம்

தொலைத்தொடர்பு அலைக்கற்றைகள் ரூ.77,814.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. 7 வித வரிசைகளில் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டன. ஒட்டுமொத்தமாக ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான 2,250 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டன.

தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. ஏலம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் அன்ஷு பிரகாஷ் கூறுகையில், 2 நாள்கள் நடைபெற்ற ஏலத்தில் 855.60 மெகா ஹெர்ட்ஸ் மதிப்பிலான அலைக்கற்றைகள் ரூ.77,814.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஏலம் விடப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 37 சதவீதம் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. ஏலம் விடப்பட்ட அலைக்கற்றை 20 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு