தேசிய செய்திகள்

டெல்லி ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ; 6 தீயணைப்பு வீரர்கள் காயம்

டெல்லி ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

புதுடெல்லி பவானா நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே 30 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த போராட்டத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதேபோல் முன்னதாக லக்னோவில் நிகழ்ந்த தீ விபத்திலும் 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது