தேசிய செய்திகள்

அசாமில் மந்திரியை கொல்ல பயங்கரவாதிகள் சதி திட்டம்; 3 பேர் கைது

அசாமில் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாமில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அசாமில் மந்திரியாக ஹிமந்தா பிஸ்வா சர்மா இருந்து வருகிறார்.

அவரை துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு தாக்கி கொல்வதற்கு சில அடையாளம் தெரியாத நபர்கள் அடங்கிய குழு ஒன்று சதி திட்டம் தீட்டியுள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் உல்பா பயங்கரவாதிகள் இந்த சதி திட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.

இந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் உல்பா அமைதி பேச்சுவார்த்தை குழு தலைவர் ஒருவரும் உள்ளார்.

அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர். இந்த சதி திட்டத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு