தேசிய செய்திகள்

இந்தியாவில் 7 இடங்களில் ஜவுளி பூங்கா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் 7 இடங்களில் பி.எம். மித்ரா எனப்படும் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மற்றும் ஆடை பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 4,445 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் 21 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் ஜவுளி உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தமிழ்நாடு, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, ஆந்திரா, குஜராத், அசாம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், தங்கள் மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு