தேசிய செய்திகள்

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் 9-ந்தேதி வரை பாதுகாக்க வேண்டும் - தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் 9-ந்தேதி வரை பாதுகாக்க வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் பெண் டாக்டரை கற்பழித்த 4 பேரை தப்ப முயன்றதாக கூறி போலீசார் சுட்டுக்கொன்றனர். இது சட்டத்தை மீறிய செயல் என்றும், இதில் கோர்ட்டு தலையிட வேண்டும் என்றும் தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐகோர்ட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. 4 பேரின் பிரேத பரிசோதனையை சி.டி. அல்லது பென்டிரைவில் வீடியோவாக பதிவு செய்து மெஹபூப்நகர் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதனை ஐகோர்ட்டு பதிவாளரிடம் இன்று (சனிக்கிழமை) மாலை ஒப்படைக்க வேண்டும். மாநில அரசு 4 பேரின் உடல்களையும் 9-ந்தேதி இரவு 8 மணி வரை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு