தேசிய செய்திகள்

ரூ.445 கோடி கடன் மோசடி ஐ.டி.பி.ஐ. வங்கி முன்னாள் பொது மேலாளர் மீது வழக்கு

ஐ.டி.பி.ஐ. வங்கியின் பஷீராபாக் கிளையின் பொது மேலாளராக இருந்தவர் பட்டு ராமராவ்.

தினத்தந்தி

புதுடெல்லி,

2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை, இவர் 220 பேருக்கு ரூ.192 கோடியே 98 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இவை போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டன. இதற்கு பட்டு ராமராவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. கடன் பெற்றவர்கள், அதை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.

கடனை திருப்பிச் செலுத்தாததால், அது வட்டியுடன் சேர்ந்து ரூ.445 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே, இந்த மோசடி தொடர்பாக பட்டு ராமராவ் உள்பட 31 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து